உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பான இடம் |

NSB Bank Sri Lanka Banner

பஸ் அவுருது கணக்கு

நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தின் ஒரு பகுதியினை கவர்ச்சிகரமான வட்டி வீதங்களை வழங்குகின்ற ”பஸ் அவுருது சேமிப்புக் கணக்கு” என்ற எமது விசேட நீண்ட கால கணக்கில் மாதாந்த அடிப்படையில் சேமியுங்கள்.

 

இக்கணக்கினை யார் தொழிற்படுத்த முடியும்?

  • 16 வயதிற்கு மேற்பட்ட இலங்கையர் எவரும் இக்கணக்கினை ஆரம்பித்து தொழிற்படுத்தலாம்.
  • தனிப்பட்டவராக, இணைந்த அல்லது சிறுவர் கணக்கு வைத்திருப்பவராக கணக்கினை ஆரம்பிக்கலாம்.
  • எனினும், இக்கணக்கை நிறுவனம் சார்ந்த, நீதிமன்ற, பிணைய அல்லது நம்பிக்கை பொறுப்பு கணக்குகளாக ஆரம்பிக்கப்பட முடியாது

 

எவ்வாறு கணக்கினை ஆரம்பித்து பேணுவது?

  • ரூபா 100/-, ரூபா 200/-, ரூபா 300/-, ரூபா 400/-, ரூபா 500/-,மற்றும் ரூபா 1000/- அல்லது ரூபா ஆயிரத்தின் மடங்குகளை கொண்ட மாதாந்த வைப்பொன்றின் மூலம் ஆரம்பிக்கப்படலாம் என்பதுடன் கணக்கின் காலம் 5 வருடங்களாக இருக்கும் (60 மாதங்கள்) *
  • இணங்கிய மாதாந்த வைப்புத் தொகை தவறாது ஒவ்வொரு மாதத்தின் ஏதாவது தினத்தில் கணக்கிற்கு வரவு வைக்கப்பட வேண்டும்*
  • நாளாந்தம் வட்டி கணிப்பிடப்பட்டு மாதாந்த அடிப்படையில் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

கிடைக்கப் பெறும்  விசேட  நன்மைகள்  யாவை?

  • மாதாந்த வைப்புத் தொகையின் அடிப்படையில் உமது வட்டித் வீதங்கள் நிர்ணயிக்கப்படும். உயர் வைப்புத் தொகைகளுக்கு உயர்வான வட்டி வீதங்கள் வழங்கப்படும்.
  • உமது அனைத்து சேமிப்புகளுக்கும் அதன் மூலம் உழைக்கப்படும் வட்டிக்கும் 100% அரசாங்க உத்தரவாதம்

 

* நிபந்தனைகளுக்கு உட்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் 24 மணி நேர சேவை அழைப்பு நிலையத்தை (+94112379379) தொடர்பு கொள்க

INQUIRE NOW

Inquiries

Contact Us

தேசிய சேமிப்பு வங்கி

இல. 255

காலி வீதி

கொழும்பு 03

011-2379379
callcentre@nsb.lk
பதிவிறக்கம் கணிப்பான் வட்டி வீதங்களுக்காக
இணையவழி வங்கிச்சேவை